தமிழே! அழகோவியம் நீ!

தமிழே!
அழகோவியம் நீ!
அருள் காவியம் நீ!

என் மொழியாய் பிறந்திட்டாய்!
என் வழியாய் தெரிந்திட்டாய்!
என் இதழில் தவள்ந்திட்டாய்!
என் உயிரில் கலந்திட்டாய்!

என் கற்பனை வளர்த்திட்டாய்!
என் கவிதையில் வாழ்ந்திட்டாய்!
என் கனவை உணர்த்திட்டாய்!
என் நினைவே நீயானாய்!

என் கண்ணின் ஒளியானாய்!
என் காதின் இசையானாய்!
என் வாழ்வின் மூச்சானாய்!
என் இதய துடிப்பானாய்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (3-Jul-13, 8:15 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 464

மேலே