ஒரு புறப்பாடு ஒரு வருகை

இறைவனை நாடி வந்தது துபாய் விசா
தலை மகன் புறப்பாடு “இன்ஷா அல்லாஹ்”

இனிதாய் அமைய அருள் செய் அல்லாஹ்
அவன் நிலையை உயர்திதா யா அல்லாஹ

திருவனந்தபுரம் மார்க்கம் வானூர்தி பயணம்
திரும்பும் நாள் உனக்கு மட்டுமே அறியும்

ஜூலை ஆறு எமிரேட்ஸ் விமானம் –இனி
சுந்தரமாய் அமைய உன் வாழ்க்கை நாளும்

சந்தோசம் ஒரு புறம் மனசு பெருமிதம் –உன்
பிரிவை தாங்காது தினம் ஒரு பொழுதினம்

வருகையாய் இளைய மகன் தாயகம் தேடி
மருத்துவம் செய்ய இறைவனை நாடி

இருப்பினும் சந்தோசம் இளையவனை காண
ஜூலை காலை ஆவலோடு அந்த வேளை

கலக்கமாய் மூத்தவனை வழியனுப்பி
வருகையில் இளையவனை எதிர்பார்த்து

வருகையும் ,புறப்பாடும் அமைந்தது உன்னாலே
நிறைவாய் செய்வாய் உன் அருளால் எந்நாளும்

தலைமகனின் புறப்பாடு,இளையவனின் வருகை
இருவரும் சந்தித்து கொள்ளாத நிலை அன்று

இறைவா ! இருவருக்கும் நல்ல வழி காட்டு
இரு கரம் ஏந்தி கேட்கின்றோம் துவா நின்று !

துவாவுடன் பெற்றோர்கள்
-ஸ்ரீவை.காதர்-

எழுதியவர் : ஸ்ரீவை.காதர். (14-Jul-13, 11:22 am)
பார்வை : 47

மேலே