வாழ்க்கை பயணம்
ஓ! மனிதா
நீ நடக்கும் பாதையில்
பல முட்கள் இருக்கும்
அதை நீ நினைத்தால் பூக்களாக
மாற்றலாம் .....
நீ கடக்கும் நதியில்
வெள்ளம் பெருக்கெடுத்து ஓடலாம்
அதை நீ நினைத்தால் நீந்தி கடந்து
விடலாம் ....
ஏய் !மனிதா
மகிழ்ச்சியை மட்டும் ஏன்
அடைய நினைக்கிறாய் -பாவம்
அந்த கவலைகளையும் எடுத்துப் பார்
மகிழ்வின் சந்தோஷத்தை அளவிடலாம் ....
மனிதா!
காந்தி சென்ற பாதையிலும்
கூட பிரச்சனைதான்
நீ மட்டும் அதற்கு விதிவிலக்கா
மனிதனே!
கடல் பயணத்தில் சிரமப்பட்டுதான்
முத்தை எடுக்கிறான் -அதே போல்
வாழ்க்கை என்னும் பயணத்தில்
புகழை அடைவதும் கடினம்,
என்று மட்டும் நினைக்காதே
முயற்சி செய் புகழ் கிடைக்கும்
................................................................ஷீலா ................