விலைமகளின் தாய் பாசம் .................

விவரம் அறியா வயதில்
விற்றால் தன் உடம்பை
எதிர்காலம் அதுவாகி போக
தொடர்ந்தாள் ஏதோவென

யாரோ மூலம் பெற்றாள்
ஒரு பிள்ளை நேசிக்கிறாள்
தன உயிராய் அவனை
தன் அருகில் இருந்தால்
தன்னிலை அறிவான் என
யோசித்து வைத்து தனியே அனுப்பி வைத்தாள்

இன்று முழு மனதுடன் விற்கிறாள்
வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறாள்
உடம்பு தின்னும் கழுகளுக்காக
அவர்கள் தரும் பணத்திற்காக

நிச்சயம் விடியும் அவன் மகனால்
அவள் வாழ்க்கை என்றே
முடிகிறது அவளது எல்லா இரவும்
விடியலை நோக்கி ............

எழுதியவர் : ருத்ரன் (20-Jul-13, 4:19 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 66

மேலே