+ஒரு நாள் தோழி!+

ஒரு தேர்வெழுத
என்னூரைவிட்டு
வெளியூர் ஓர்நாள்
சென்றிருந்தேன்...!

அந்த ஊர் பயணம்
அதுவே எனக்கு முதல்முறை!
கல்லூரி இருக்குமிடம் தெரியாமல்
தவித்துக்கொண்டிருந்தேன்!

அப்போது
என்னருகே வந்தாள் ஒரு தோழி!

"நீங்க பரிட்சைக்கு வந்தீங்களா?
நானும்
அங்கதான் போகணும்.
வாங்க எனக்கு வழி தெரியும்."
என படபடவென்று பேசியவாறே
என்னை
ஒரு பேருந்திற்கு
கூட்டிச்சென்றாள்...!

அதுவரை என்னிடம்
எந்தப்பெண்ணும்
இவ்வளவு சகஜமாக
பேசியதில்லை...!

எனக்கும்
கூச்ச சுபாவமானதால்
நானும்
எந்தப்பெண்ணிடமும்
பேசியதில்லை...!

அவளின்
இந்த அழைப்பே
எனக்கொரு
கர்வத்தை கொடுத்தது!

பேச்சுவாக்கில்
என்னிடம் பேசிய தோழி
என்னைவிட மூத்தவள்
எனத்தெரிந்து கொண்டேன்!

பேருந்தில் நடத்துனர்
என்னிடம்தான் பயணச்சீட்டுக்கு
முதலில் வந்தார்!

தைரியமாக
இரண்டு சீட்டு வாங்கினேன்!

எனக்கே
பெருமையாக இருந்தது!

நடத்துனர்
எங்கள் இருவரையும்
பார்த்த பார்வை
எனக்கு
மிகவும் பிடித்திருந்தது!

தேர்வு முடிந்தவுடன்
வேறு பேருந்து பிடித்து
அவள் அவளூர்
சென்றுவிட்டாள்!

இருந்தாலும்
அவள்
ஓர்நாளில்
என்னிடம்
விட்டுச்சென்ற
நினைவுப்பூக்கள்
பதினைந்து வருடமாகியும்
இன்று வரை
வாடாமல்
அவ்வப்போது
பூக்கின்றன...!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (26-Jul-13, 6:16 am)
பார்வை : 291

மேலே