ஒரு கதை ஒரு குறள் ஒரு ஹைக்கூ (03)

ஒரு கதை ( தொடர் ,,,03)
********

சித்திரவேல் ...அருள்வேலின் நெருங்கிய நண்பர்
அருள் வேலின் பாட்டியின் திவசத்துக்கு குடும்பதோடு வந்திருந்தார் .திவசத்துக்கு புரோகிதர்
வந்து கிரிகைகள் செய்கிறார் உறவினர் வந்துகொண்டு இருக்கிறார்கள் கிரிகை முடிந்ததும்
உறவினர்கள் எல்லோரும் கூடி விருந்துண்டனர் . அன்னம் -என்று கூப்பிட்டார் அருள்வேல் மனைவியை ...!!! என்னப்பா என்று கேட்டபடி வந்தால் அன்னம் ...!!!

அந்த முதியோர் இல்லத்துக்கும் சாப்பாடு செய்யசொன்னேன் செய்ததா ...?
ஆமப்பா ....!!!
அந்த சாப்பாட்டை எடுத்துவா ..நான் அவர்களுக்கு கொண்டே கொடுத்துவிட்டு சாப்பிடுகிறேன் என்று கூறிக்கொண்டு ..மச்சி சித்திரவேல் வாறியா..? போட்டு வருவோம்
என்று கேட்க ..நானும் வருகிறேன் என்று சொல்லிய படி இருவரும் சென்று வந்தனர் ...

எல்லோரும் சந்தோஷமாக விடைபெற்றனர் மாலையில் ....!!!

ஒரு குறள்
*********

தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்து ஆறுஓம்பல் தலை


ஒரு ஹைகூ
**********
ஐவர் கடமை சிறப்பாகவும்
பண்புடனும் செய்வான்
இல்லத்தலைவன்

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (31-Jul-13, 7:18 pm)
பார்வை : 195

மேலே