மழை நீர்

துளி துளியாய்
பெய்யும் மழை
முகத்தில் மழலையாக
முத்தமிடும் மழை.

அனாதையாக விடப்படுகிறது
சாக்கடையில் -அதனை
அரவணைத்து சேர்த்திடுவோம்
மழைநீர் தொட்டியில்...

அது
பூமித்தாயோடு வளர்ந்து
நன்மையாக
நம்மையும்
நம் தலைமுறையினரையும்
காப்பாற்றிடுமே !

மழை நீர் நம்
உயிர் நீர் !!!

----------------ரா.சந்தோஷ் குமார்
,

எழுதியவர் : ரா.சந்தோஷ் குமார் (11-Aug-13, 5:24 pm)
பார்வை : 6572

மேலே