மழை நீர்
துளி துளியாய்
பெய்யும் மழை
முகத்தில் மழலையாக
முத்தமிடும் மழை.
அனாதையாக விடப்படுகிறது
சாக்கடையில் -அதனை
அரவணைத்து சேர்த்திடுவோம்
மழைநீர் தொட்டியில்...
அது
பூமித்தாயோடு வளர்ந்து
நன்மையாக
நம்மையும்
நம் தலைமுறையினரையும்
காப்பாற்றிடுமே !
மழை நீர் நம்
உயிர் நீர் !!!
----------------ரா.சந்தோஷ் குமார்
,