உயிர் எழுத்துக்கள்

உயிர் எழுத்துக்கள்

அன்பின் வாயிலே
ஆண்டவனின் கோயில்

இன்னல் ஒன்றும் பெரிதல்ல
ஈன்றதாய் பட்டதை விட

உன்னைப்போல் வளர
ஊரும் ஆசைப்படவேண்டும்

எண்ணங்கள் யாவையும்
ஏட்டினில் அடைத்துச்சொல்

ஐம்பூத்திற்கு மேலும் ஆற்றல்கொள்

ஒன்றொன்றாய் சேர்த்தால்
ஓராயிரமாகும் மறவாதே

ஒளவையினும் பெண்ணே அறிவுகொள்

எஃகினும்வலிய மனஉறுதிகொள்

.................................சரவணா

எழுதியவர் : சரவணா (16-Aug-13, 3:21 pm)
பார்வை : 159

மேலே