தொடரும் முடிவுறா மகாபாரதமே! - இன்றும் வாழ்க்கை
பிறப்பு எழுதப்பட்டஅன்றே
இறப்பும் உறுதியாகிவிட்டது;
இனிஇருக்கும் இடைப்பட்ட பயணத்தில்,
உதிக்கும் ஒவ்வொரு நாளும்,
விதிக்கும்,
விதிக்குப் புறம்பான மதிக்கும்
மதியின் சதிக்கு மிடையேயான போராட்டம்,
மாறுபட்டதே யாயினும்
தொடரும் முடிவுறா மகாபாரதமே! -
இன்றும் வாழ்க்கை.