கற்பு
கலவிக்குப் பிறந்த காடையர்களே
ஜன்னல்க் கரையோரம்
தென்றலுக்காய் ஒதுங்க- என்
நெஞ்சுக்குழியெல்லம்
கொதித்துத்
தெறிக்கிறது - கண்மணியைக்
கண்ணிமையும்
கண்ணிமையை
என் மனமும்
மூடி திறக்கின்ற ஒறு கால்ப்
கணக்கிடையில்
கற்பைக் கிளித்தெறிந்து
கறிக்குழம்பு வைக்கின்ற - காமச்
சக்கரங்கள்
என் வீட்டு வீதியெல்லாம்
ஊரோலம் போவதனால் - நான்
கட்டிய கீழாடை தானாய்
கசங்கிக் கிளிகிறது
செந்தணற் சூட்டில் வெதும்பிச் சிவைந்து
விட்ட
பசுமைக் கொடியைப் போல்.