இவ்வளுதானா.................?

ஏன் என்னை நீங்கள்
படுக்க வைத்திருக்கிறீர்கள்
ஏன் என் முன் இருந்து அழுகிறீர்கள்
ஏன் சவப்பெட்டி அடிக்கிறீர்கள்

நான் கொஞ்ச நேரத்திற்கு முன்தானே
உங்களுடன் சிரித்து கதைத்தேன்
கொஞ்ச நேரத்திற்கு முந்தானே
என் மகளுடன் ஓடி விளையாடினேன்

நான் கதைப்பைது உங்களுக்கு கேட்கவில்லையா ?
உங்கள் செவிகளுக்கு யார் பூட்டு போட்டார்கள்
நான் பார்ப்பது உங்களுக்கு தெரியவில்லையா ?
உங்கள் கண்களுக்கு யார் திரை இட்டார்கள்

ஆனால் ........
நான் பார்க்கிறேன்
என்கண்கள் திறக்கவில்லை
நான் கதைக்கிறேன்
என் உதடுகள் அசையவில்லை

கொஞ்சம் பொறுங்கள்
கொஞ்சம் பொறுங்கள்
ஏன் என்னை வெள்ளை புடவையால் சுற்றுகிறீர்கள்
இல்லை இல்லை
என்னை சவப்பெட்டியில் வைக்க வேண்டாம்

என் பொண்டாட்டியே
நான் கதைப்பது உனக்கு கேட்கவில்லையா....?
என் அன்பு மகளே
நான் உன்னை கூப்பிடுவது உனக்கு தெரியவில்லையா .....?

என்னை எங்கே தூக்கி செல்கிறீர்கள்
இல்லை இல்லை
என்னை மண்ணில் வைத்து புதைக்காதீர்கள்
ஏன் என்னை தனியாக விட்டு செல்கிறீர்கள்

இவ்வளுதானா இவ்வுலக வாழ்கை
இவ்வளுதானா இந்த உறவும் பாசமும்
இவ்வளுதானா என் பயணம் ...............?

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (24-Aug-13, 1:24 pm)
பார்வை : 89

மேலே