அன்பாக நிறைந்திருப்பான் என்னுளே ....

கவியின் உலகின் அழகிய
பிரம்மன் அவனே
எழுத்துகளை வார்த்தை கொண்டு
செதுக்கிய சிற்பியும் அவனே
உள்ளத்தை திருடி சென்ற
கள்வனும் அவனே
வானில் இருக்கும் நிலவிற்கு
திருஷ்டி பொட்டினை
நட்சத்திமாக வைத்தவன் அவனே
எழுதும் பொருளின்
அர்த்தமும் அவனே
இவை அனைத்திலும் நான்
கண்ட எண்ணங்களும் அவனே
அன்பாக நிறைந்திருப்பான்
என்னுளே என்னவன் மட்டுமே ....

எழுதியவர் : ப்ரியாஅசோக் (27-Aug-13, 11:38 am)
பார்வை : 73

மேலே