தந்தையின் குரல் ....!!

மகன் பிறந்த சேதிகேட்டு
மீசை முறுக்கிக் கொண்டேன் ...!!
கொள்ளிபோட வாரிசு வந்ததென
கொஞ்சி கொஞ்சி மகிழ்ந்தேன் ...!!

விரல் பிடித்து நீ நடக்க
என் உயிர்த்துளி நீயென
இதயம் சிலிர்த்தேன் ....!!

வளர வளர நமக்குள்ளே
நெருக்கம் குறைந்ததோ ...?
தேவை எதுவும் என்றால்
தாயைத்தான் தேடுகிறாய் ..!

பிடித்ததை அடம் பிடித்து
என்னிடம் கேட்டால் என்ன ?
பொய்க்கோபமுடன் உனை அதட்டி
அடுத்த நாளே தருவிப்பேன் ...!!

மனதில் கவலை இருந்தாலும்
என்னிடம் மறைக்கத்தான்
பார்க்கிறாய் - தாய்
மடி தேடி ஓடுகிறாய் ...!!

மகன் உனக்குத் தோழனாய்
இருந்திடவும் ஆசைதான் ....
இருந்தாலும் மரியாதை கருதி
தள்ளியே நிற்கிறாய் ....!!

உன்னோடு கைகோர்த்து
உலகம் சுற்ற வேண்டும் !
உன் உயர்வில் உளம் மகிழ்ந்து
உயரப் பறக்க வேண்டும் !
உன்பிள்ளை என் தோளில்
உட்கார்ந்திருக்க வேண்டும் !
உன்மடியில் படுத்தபடி -என்
உயிர் பிரிய வேண்டும் .....!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Aug-13, 10:32 pm)
பார்வை : 71

மேலே