துணையை காணும் வேளையா

​நுனிக் கிளையில் அமர்ந்து
தனி ஒருவராய் நோக்கிடும்
தனிமை விரும்பியா இல்லை
தனித்து ஆனதால் சோகமா !

இணையைத் தேடும் காரணமா
துணையை காணும் வேளையா !
இனிமைப் பொழுது நேரமா இது
தனிமைப் பொழுதின் தாக்கமா !

​காய்ந்த மரத்தில் இருந்திடும்
கவலை தோய்ந்த குருவியே
மாய்ந்திடும் நேரத்து மரமிது
தேய்ந்திடும் சோகம் மாறிடு !

வானத்தில் பறந்திடும் வண்ணமே
வாழ்வை மாற்றிடும் எண்ணமே !
வசந்தம் நிலையாய் தங்கட்டும்
வருத்தம் உனைவிட்டு நீங்கட்டும் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (28-Aug-13, 11:03 am)
பார்வை : 97

மேலே