###குழந்தை திருமணத்தை ஒழிப்போம் ###

பல நூறு வருசமாச்சி
காலங்கள் மாறியாச்சி
மனிதனின் குணங்கள் மாறவில்லை
புத்தியும் மாறவில்லை இன்று
அறியா பருவத்து படிக்கும் பிள்ளைக்கு
திருமணமாம் அறுபது வயது
முதியவனுடன் என்னவென்று
தெரியாத சிறுபிள்ளைக்கு அவர்
செத்தவுடன் சொத்துகள் சேர்ந்திடுமாம்
சொந்தங்கள் கூடிடுமாம் குடும்பத்தில்
மகிழ்ச்சியில் இருக்க நான் மட்டும்
வெள்ளை உடை உடுத்தி மூலையில்
முடங்க வேண்டுமாம் விதவை கோலத்தில்
என்மனதில் ஒருகேள்வி ?
பொறுத்திரு காலம் பதில் சொல்லும்
இருந்தும் கண்களில் கண்ணீர்
நானும் ஒரு பெண் தானே என் எதிர்காலம் ?
இருட்டினில் என்வாழ்வும் படிபின்றி
போய்விடுமா ?பதில் சொல்லிடுங்கள்
நான் ஒரு விதவை என்று ஊர் சொல்லினாலும்
கவலை இல்லை என்னை இந்நிலைக்கு
காரணமும் அவர்களும் தான்
இன்று ஒரு விதையாவேன் நாளை
வேர்ஊன்றி குழந்தை திருமணத்தை தடுத்து
கல்வி வழங்கிடும் ஒரு விருட்சமாக உருவெடுப்பேன் என்னை தடுத்திட முடியாது .....

எழுதியவர் : ப்ரியாஅசோக் (28-Aug-13, 12:43 pm)
பார்வை : 92

மேலே