அவளேதான்

அவளேதான் கனவையும் நனவையும்

வித்தியாசப்

படுத்திக் கொள்ள

கட்டில் மெத்தைகளுக்கெல்லாம் தினம்

கடிவாளம் பூட்டிய எனக்கு

முகமன் கூறாது

வந்த பதிலொன்று

கனவென்பது கற்பனையின் உச்சத்தில்

கானல் நீரில்

மிதப்பதும்

நனவென்பது நிஜத்தில் மூழ்கிய

புயத்தில்

வியர்ப்பதும் என்றது

இவையெல்லாம்

நானாய் உணரவில்லை

அவளாய் உணர்த்தியது -ஆம்

அவளேதான்...!


முல்லைகேசன்

எழுதியவர் : முல்லைகேசன் (30-Aug-13, 12:37 pm)
பார்வை : 71

மேலே