விந்தை.....

உந்தையும் தாயும்

மகிழ்ந்ததை

சந்தையில் செய்தால்

ஏற்குமோ?

அற்ப சுகத்திற்க்கு

அடிமையாகி

அவமான சின்னமாய்

முகம் மூடி

முக்காடிட்டு

இழுத்து போகும்

இழி நிலையேனோ?

நிமிடக் கழிவை

காலம் முழுதும்

சுமக்கிறாய்,

இவ்வுலகத் தீர்ப்பு

ஒன்றுமே

செய்யாதுன்னை,

பாதித்தவளிடம்

கொடுத்திருக்க வேண்டும்

ஒரு கோடாரியை

தீர்வை தந்திருப்பாள்,

எழுதியவர் : (2-Sep-13, 3:32 am)
பார்வை : 86

மேலே