அரசு அன்னமென.....
நினைவுகள் மலரும்
கனவுகள் தொடரும்
கற்பனைகள் விரியும்
கவிதைகள் பிறக்கும்
சிறகுகள் விரித்து
வானில் பறக்கும்
வானவில்லை முத்தமிடும்
வண்ணங்கள் பூசி வரும்
நிலவிடமும் நீல வானிடமும்
பாடம் கேட்டு பூமிக்குத் திரும்பும்.
எழுத்தெனும் எழில் வீதியில்
அரசு அன்னமென நடை பயிலும்
இதயங்களில் எண்ணப் புள்ளிகளிட்டு
நட்சத்திர கோலம் இடும் .
~~~கல்பனா பாரதி~~~