தமிழ்க் கடல்

தேனிசை தமிழோ இனிக்குதடா
தென்றலும் தமிழ் மனம்
வீச துடிக்குதடா
வேற்றினமும் நம் தமிழை
வியப்பாய் படிக்குதடா
மூத்த மொழிகளுக்கு என்றும்
இவனே நிரந்தர முதல்வனடா!!!!!!!

---->>>தமிழரின் அலட்சியம்

முகநுலிலே மூழ்கி தமிழ்
அக நூல்களை நீயும் மறக்கிறாய்
கேணியில் வாழும் தவளையாய் நீ
ஆங்கிலமே அறிவென்று வாழ்கிறாய்
சேரும் இடம் அறியாமல்
செம்மறி ஆடாய் பின்னே ஓடுகிறாய்
பயின்ற பச்சிளந்தமிழை
பகுத்தறிவின்றி தினம் கொள்கிறாய்
குளத்தில் வாழும் மீனாய் நீ
தமிழ்க் கடலின் ஆழம்
புரியாமல் தவிக்கிறாய்.......

எழுதியவர் : (13-Sep-13, 9:37 pm)
பார்வை : 111

மேலே