பூபூக்கும் சாலையோரம்
காலை பொழுது
கண்ணுறங்க தயங்கியது
என் விழிகள் .
புரியாமல் மனம் நடுங்க
நடை பயணம் தொடர்ந்தேன்.
பூபூக்கும் சாலையில் அழகாக
அவள் மட்டும்!!!
அவள் அருகில்
ஆவலோடு சென்றேன் .
தயங்கியது அவள் மனம்
என்னிடம் நெருங்க
ஓடி விட்டது
என் கால்களை கடித்துவிட்டு
அந்த
குட்டி நாய்க்குட்டி !!!!
என்றும் உங்கள்
உமா நிலா