உருக்கமான வரிகள்

வெகுமதி மற்றவரிடம் எதிர்ப்பார்ப்பது...,
பல அவமான மூட்டைகளை தானே அவிழ்த்துவிடுவது போல் ஆகிவிடும்...!

உறவு யில்லாத உள்ளங்கள்...,
நடுகடலில் தூணில் கட்டப்படாத கயிற்றின் இழுவைதான் பலமாக இருக்கும்...!

எதார்த்தங்கள் என்று எண்ணி...,
பல ஏமாற்றங்களைதான் எதிர்க்க நேரிடும்...!

முற்றும் துறந்தவர்களின் பள்ளிசாலை எதுவென்றால்...,
தன் குடும்பமென்னும் வகுப்பறையாகதான் இருக்கும்...!

தோல்விக்கு முன்னால் நிற்பது உன்முகம் மட்டும்தான்...,
அதுவே வெற்றியின் பின்னனியில் கண்ணுக்கு தெரியாத பல உருவங்கள்தான் முன்னே நிற்கும்...!

கடைசி வரைக்கும் கண்ணீர் வடிப்பது தாயும்,தாரமும்தான் உனக்கு...,
அதுவும் போலி யென்றால்,நீ வீணாக சுமக்கப்பட்ட இந்த பூமியின் பாரமே...!!

எழுதியவர் : காந்தி. (25-Sep-13, 11:19 am)
பார்வை : 314

மேலே