"பெண்ணுரிமை" தந்த இஸ்லாமே...
மது போலே போதையேற்றும்,
மனைப்பொருள் தான் மங்கையென்றோர்,
மனம் விரும்பும் வகையமைத்த,
மண் மார்க்கம் இஸ்லாமே.....!!!
துருப்பிடித்த கைகளுக்கு,
தூரிகையின் வரம் கொடுத்து,
எழுத்துருவில் ஏகாந்தம்,
ஏற்றிவிட்ட வான் தூதே.....!!!
வாய் மூடிக் கிடந்தவளை,
வாஞ்சையுடன் வழி சமைத்து,
பேச்சென்ற பேரின்பம்,
பெண்ணோடு தந்ததுவே.....!!!
சந்ததிகள் உருவாக்கும்,
எந்திரமாய் கண்டவளை,
தாய் அவளின் பாதத்தில்,
தான் சுவனம் என்றதுவே.....!!!
வேதனைகள் தாங்கி வரும்,
சாதனை தான் பெண்மையவள்,
உரிமையுடன் அவள் உரிமை,
அளிப்பதுவே எம் கடமை....!!!