சிலைகள் உடைத்து மனிதம் படைப்போம்
பேனா ஏந்தும் கைகளில்
அமில உருண்டைகள்,பேனா
பட்டாசு கொளுத்தி
கொண்டாடும் கைகளில்
பட்டாசு உருட்டி பசியாறும் நிலை ..
அவன் கல் என்று நிரூபித்து விட்டான்,........
குழந்தையின் கைகள் விஷம்
உண்ட பின்னும் ....
அவன் பார்வை திரும்பவில்லை .....
அவன் மனம் இரங்கவில்லை ......
அவன் கரம் நீளவில்லை ......
கோடிகள் கொட்டி பூசைகள் எதற்கு?
பூசைகள் செய்யும் காசில்
ஏழையின் வயிற்றை நிறைக்கலாம் வாரீர்.
சிலைகள் உடைத்து
மனிதம் படைப்போம்