உணராத போது புரியாதவள் "அம்மா"

வன்முறையாய்...
வலி கொடுத்துப்...
பிறந்த உனக்கு...
முதல் பார்வை...
முத்தம் செதுக்கியவள்...
அம்மா!!!

உதிரமுதம் ஊட்டி...
உயிராய் உனை மாற்றி...
அகிம்சை அராஜகத்தில்...
அகமகிழ்ந்தவள்...
அம்மா!!!

ஆசைகள் யாவையும்...
நீ என நினைத்து...
நித்தம் ஓர் நிதர்சனம்...
உருவாக்கினாள்...
அம்மா!!!

வலிகளுக்குள் எரிந்தாலும்...
சூரியனாய் ஒளி கொடுத்து...
உன் பிள்ளை பூமிக்கு...
உயிர் தந்தாள்...
அம்மா!!!

முதல் ஆசான் அவளாக...
முழு நேர மதியாக...
உனை தாங்கும் கருவாக...
நிலைகொண்டாள்...
அம்மா!!!

வெறுத்தாலும் விருப்போடு...
உனை தாக்கும் காற்றோடு...
போராட்டம் நடத்துகின்ற...
பூந்தோட்ட பூகம்பம்...
அம்மா!!!

எழுதியவர் : தோழமையுடன் ஹனாப் (11-Oct-13, 4:49 pm)
பார்வை : 150

மேலே