மடி வேண்டும் உன் மடி வேண்டும் !

விரல்களோ உன் செவ்விதழ்கள் தொட
என் இதழ்களோ உன் காதுமடல் கடிக்க
உணர்ச்சிகள் எழ கவிதைகள் பல..
மெய்சிலிர்க்க கண்கள் சொக்க..
கனவுகள் கோடியடி
கண்மணியே என் கற்பனைகள் நீளுமடி..
மடி வேண்டும்
மீண்டும் ஒரு குழந்தையாய்
தவழ்ந்திட உன் மடி வேண்டும் !!

எழுதியவர் : ரா. கோபாலகிருஷ்ணன் (14-Oct-13, 7:19 pm)
சேர்த்தது : Gopalakrishnan Raman
பார்வை : 790

மேலே