சிலைகள் கண்ணீர் வடிக்குமா?
கல்போன்ற
உங்கள் மனதைப்பார்த்து
சிலையாகிப்போன
நாங்கள் தான்
கண்ணீர் வடிக்கிறோம்!
சிலையை சீராட்டி
சும்மாயிருப்பதற்கு
பாலூட்டுகின்றீர்!
அழுது துடிக்கும்
பச்சிளம் குழந்தையிடம்
பாரபச்சம் பார்க்கின்றீர்!
உள்ளே கருத்திருக்கும்
சிலைகள்தான்
வெளியே காத்திருக்கிறது
பசியோடு உயிராக!