உயர்வானில் ஓர் உலா

நீல வானில் நீந்தி
நீயும் நானும் செல்லலாம்...
நிலவுக்கு காதல் குறிப்புகள்
நாம் எழுதி தரலாம்...
சந்திரர்,சூரியர்,விண்மீன்
என்ற வான்வேந்தர்களுடன்
விளையாடலாம்...
நம் வருகையால் வான்வெளியெ
பூத்து குலுங்கும்...
மலர்மழை பொழியும்...
ஏழு வண்ண வானவில்
ஆயிரம் வண்ணமென மாறும்...
வாசம் விற்ற பூக்களும்,
நேசம் பெற்ற உயிர்களும்
நம்மை யாசிக்கும்...

எழுதியவர் : கண்ணன் (20-Oct-13, 10:26 am)
சேர்த்தது : கண்ணன்
பார்வை : 58

மேலே