சிந்திக்கலாம் வாங்க!(தாரகை)

படைப்பினத்தை விட்டுவிட்டு
படைத்தவனை இறைவனென்று
இறையச்சம் இதயம் கொண்டு
இனி(ய) வாழ்வை தொடங்கிவிடு!

வானகத்து வானவர்கள்
மண்ணகத்து மாந்தர்கட்கு
நன்மையினை அள்ளித்தர
செம்மையாய் பயன்படுத்து!

இறைவனின் திருவருளால்
மறையினை நன்குணர்ந்து
நேரான வழியின்பால்
நிமிர்ந்து நீ நடைபோடு!

இம்மையில் வழிகாட்ட
இறைத்தூதர் பலர் கண்டோம்
அவர்தம் அறிவுரைக்கு
அடிபணிய கற்றுக்கொள்!

மறுமை நாள் வந்துவிடும்
மறுக்காதே மறக்காதே
ஆண்டவன்முன் அந்நாளில்
அனைவர்க்கும் கேள்வி உண்டு!

சதிகளை முறியடித்து
மதியாலே வென்றிடு
எல்லாவற்றிற்கும் அடிப்படை
இறைசித்தம் ஒப்புக்கொள்!

எழுதியவர் : தாரகை (22-Oct-13, 7:44 am)
பார்வை : 297

மேலே