உன் ஒற்றைப்பார்வைக்காக...

எதிர்பார்த்த தருணங்களில்
ஏமாற்றம் தந்துச் சென்றாய்...
கண்களில் நீயில்லையெனில்
கனவைத் தொலைத்திருப்பேன்...
மூச்சில் இல்லையெனில்
மறுத்திருப்பேன் சுவாசத்தை...
உதிரம் நீயின்மையால்
உரையச் செய்திருப்பேன்...
துடிப்பில் காணாமல் போனால்
அடைத்திருப்பேன்
இதய வாசல் தனை...
உயிரை உட்புகுத்தி
உடல் தன்னை இயக்கிவிட்டு
மனதையேன் பறித்துப்போனாய்...
உச்சியில் பறக்க விட்டு
உதறிவிட்டுப் போனதேன்...
சிட்டாய் பறக்கவிட்டு
சிறகொடித்துப் போனதேன்...
மொட்டை மலரவிட்டு
கிளை உடைத்துப் போனதேன்...
இப்போதும் காத்திருக்கிறேன்
வாசல் பார்த்திருக்கிறேன்
உன் ஒற்றைப்பார்வைக்காய்...

எழுதியவர் : ராஜதுரைமணிமேகலை (22-Oct-13, 9:52 am)
பார்வை : 81

மேலே