என்னை மன்னித்து விடு தாயே

அவன் பெரிய பணக்காரன், மாடி வீட்டின் மைந்தன், மாருதி காரில் பயணம், பணம் தேடி ஓர் நாள் பயணிக்கும் வேளையில், வழியில் ஒரு பிரசவத்தாய்.. பிரசவ வலி தாங்காது உதவிக்கு கை நீட்ட வைத்தியசாலை நோக்கி வண்டியை திருப்பினான், வழியெங்கும் அப் பெண்ணின் அலரல் அவன் செவிகளை தாண்டி இதயத்தை கழுவியது. அப் பெண்ணை இடம் சேர்த்த அவனுக்கு தன் தாயும் பட்ட வலி கண் முன்னே தோன்றியது, அன்னையர் இல்லம் நோக்கி அவன் பயணம் தொடர்ந்தது. தான் விட்ட தவறெண்ணி கண்கள் அழுகை மொழி பேசியது, தாயிடம் மன்னிப்பு கேட்க அவன் மனம் துடித்தது, 2 வருடத்தின் பின் அன்னையர் இல்ல வாசல் கதவை திறந்தான், அங்கே இருந்த கல்லறைகளில் ஒன்றில் அவன் தாய் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது.

எழுதியவர் : தோழமையுடன் ஹனாப் (26-Oct-13, 3:42 pm)
பார்வை : 169

மேலே