ஏமாற்று

ஏமாற்றுவது ஒரு கலை
ஏமாறுவது ஒரு தலை விதி
ஏமாற்றுபவன் ஓங்குகிறான்
ஏமாந்தவன் மயங்குகிறான்.
ஏமாற்றி அடைந்த காசு
நின்று நிலைக்காது
வந்த வேகத்தில் போய் விடும்
ஏமாந்தவன் உள்ளத்தில் எழுந்த
பெருமூச்சு வெந்து தணியும் முன்
ஏமாற்றியவன் நோந்து போ வான்
இது நாம் அறிந்த நடை முறை

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (27-Oct-13, 9:09 am)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 235

மேலே