காட்டி கொடுத்தது கயவனுக்கு

உடுக்க உடை இன்றி பசித்து
உண்ண இரவல் கேட்டு அலைகிறேன்
பைத்தியம் என்ற பெயரினை
வைத்தவர் யார் என்று,

அனைவரும் அறியும் வண்ணம்
கிழிசல் ஆடையும்
காட்டி கொடுத்தது கயவனுக்கு
நானும் ஒரு பெண் என்பதை,

உடைந்துபோகும் பேனாவின்
முனைகொண்டு கற்பு
என்னும் பெயரின் முழுமையை
உன்னால் சொல்லிட முடியாது
எனக்கும் அதை உன்னால் புரிய
வைக்க முடியாது?

பார்வை இல்லா பாவை
என்று பாவி மகன்
சிண்டையிலே தடுத்திட யாருண்டு ?
இங்கு

எந்தன் கிழிசல்
உடையை பார்த்த பல
தாய்களுக்கும்
அது தெரியவில்லை என்று
என்னை மீட்டிட்டார்
கண்ணன் வந்து என்பதை
நான் மறைவேனா?


(புத்திஸ்வதினம் இல்லாத இதுபோன்ற பெண்கள் மற்றும் ஆண்களை பாதுகாக்க 100 என்ற எண்ணையும் தொடர்பு கொண்டு உதவி செய்யலாம்)

எழுதியவர் : ப்ரியாஅசோக் (30-Oct-13, 3:51 pm)
பார்வை : 115

மேலே