+தோழிக்காய் நட்பை அழைக்க ஒரு திருமண அழைப்பிதழ்+

தனியாய் போன பாதையில்
துணையாய் ஒரு ஜீவன்!
ஜோடி சேரும் வேளையில்
நட்பே நீயும் வேண்டும்!

ஒரு மனமாய் இருந்த வாழ்க்கை!
இரு மனமாய் ஆகும் எந்தன்
திரு மணத்தின் சுப தினத்தில்
நறு மணமாய் நட்பே வா! வா!

கண்ணருகே நீர் சுரக்க‌
என்னருகே துணை இருக்க‌
உன்னன்பு எனும் பரிசு தந்து
எங்களை நீ வாழ்த்து வந்து...

அன்பான நட்பே வருக!
அழகான நட்பே வருக!
இல்வாழ்வில் இணையும் நாளில்
இன்பமாய் வருகை தருக!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (5-Nov-13, 7:40 pm)
பார்வை : 1744

மேலே