தற்கொலைக்கு தயாராகும் கவிதை

எப்பொழுதோ சந்தித்துக் கொண்டது
வெய்யிற் பாம்புகள்
தார்ச்சாலையில் வளைந்தோடிய போதோ
கறுத்திருந்த மேகநதி
தன் வியர்வைகளை பொழிந்த போதோ
யாருமே அறிந்திராத சூட்சுமத்தின்
பார்வையில்
எனதுடல் நிலத்தை உழுதபடியிருந்தாய்
சிவந்திருந்த உதட்டின்
ரேகைகளில்
ஜீவிதத்தின் பெருகும் துயர் முற்றுப்பெற்றிருந்தது
காதலானது ஜீவிதத்தின் நிறைவு
காதலானது அன்பின் வன்முறை
இப்போது நீயில்லையென்றால்
சொற்களை தகர்த்து
தன்னையே மாய்க்கும் இக்கவிதை .

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (11-Nov-13, 5:24 pm)
பார்வை : 81

மேலே