தவறுகளெல்லாம் சரிகளல்ல

செய்யும் தவறுகள்
மனச்சாட்சி அறியும்
அடுத்தவர் மேல்கொண்ட
அளவற்ற அன்பால்
அவர் செய்யும் தவறை
தவறாகவே
எடுத்துக் கொள்வதில்லை
பல இதயங்கள் ........!

வேண்டாதவர் செய்யும் தவறு
மிகைப்படுத்தப்படும்
வேண்டாப் பெண்டாட்டி
கால்பட்டால் குற்றம்
கைபட்டால் குற்றம்
என்பது போல் .........!!!!!!!

எழுதியவர் : சுசானா (13-Nov-13, 3:18 pm)
பார்வை : 125

மேலே