காதல் நினைவு
காயங்கள் ஆறிவிட்டன
அன்பே
மனதில் அல்ல
உடலில்
அவை உன்
ஞாபகச் சின்னங்க்ள்
ஓசைகள் அடங்கிவிட்டன
அன்பே
உதட்டில் அல்ல
காற்றில்
அவை உன்
வருகை ஒலிப்பான்கள்
இரவு சூழ்ந்து விட்டது
அன்பே
என் வீட்டில் இல்லை
உல்கில்
அவை உன்
உறக்கத்தின் சான்றுகள்
உயிர் பிரிந்துவிட்டது
அன்பே
யாரிடமோ அல்ல
என்னிடம் - இது
என் துரோகத்தின்
பலன்
இதயத்தின் நாளமெல்லாம்
அன்பே
நான் வ்ரைகின்ற
ஓவியத்தின் வடிவ்ம்
தான் நம் நட்பின்
அடையாளம்!