பிரிந்து இருப்பதே நன்று

நிழலாக இருப்பதையே
நான் விரும்புகிறேன்
ஏன் என்றால்
நிஜமாக இருந்தால்
பிரிவு வந்து வாட்டுமே!
குளமாக இருப்பதையே
நான் விரும்புகின்றேன்
ஏன் என்றால்
சமுத்திரமாக இருந்தால்
அலைகள் போல
எண்ணங்கள் தோன்றுமே!

வெற்றிடமாக இருப்பதையே
நான் விரும்புகின்றேன்
ஏன் என்றால்
மனித நடமாட்டமே
சலசலப்பாக உன்குரலை
எதிரொலிக்குமே!
இரவாக இருப்பதையே
நான் விரும்புகின்றேன்
ஏன் என்றால்
சுடும் சூரிய ஒளி
என் உறக்கத்தைக் கலைத்து
உன்னைப் பார்க்கச் சொல்லுமே!

பிரிந்து இருப்பதையே
நான் விரும்புகின்றேன்
ஏன் என்றால்
சேர்ந்து வாழ்ந்தாலும்
உலகம் சும்மா இருக்காதே!

எழுதியவர் : அன்புமணி செல்வம் (16-Nov-13, 6:24 pm)
பார்வை : 263

மேலே