காலம்

அந்தக் காலத்தில்
என் தாத்தா சொன்னார்
'எங்கக் காலம் ஓடிவிட்டது
நீங்க எப்படிததான்
பிழைக்கப் போறீங்களோ...?

என் அப்பாவும் சொல்வார்
'எங்கள் காலத்தைக்
கழித்து விட்டோம்
உங்கக் காலமெல்லாம்
எப்படி இருக்குமோ...?

நானும் சொல்வேன்
'உணவுப் பஞ்சம்
தண்ணீர் பஞ்சம்
நல்ல காற்றுக்குப் பஞ்சம்
என் பிள்ளைகள்
எதிர் காலத்தில்
என்ன பாடுபடப்
போறாங்களோ?'

ஆனால்
மினரல் வாட்டரைக்
குடித்துக் கொண்டு
இண்டர்னெட்டைத்
தட்டிக் கொண்டிருக்கும்
என் மகன் எதுவும்
சொல்வதில்லை.

நினைத்துக் கொள்வான்
'அந்தக் காலத்தில்
எப்படித்தான் வாழ்ந்தார்களோ?
காட்டு மிராண்டிகள்!'

எழுதியவர் : s.Nithyalakshmi (22-Nov-13, 10:25 am)
Tanglish : kaalam
பார்வை : 65

மேலே