ஒற்றுமை தேவை
அழகியதொரு வீடு,
அதில் பெரியதொரு குடும்பம்,
ஆண் பிள்ளை ஐவர் அவர்தம்
தந்தை தாயுடன் வாழ்ந்துஇருந்தனர் .
அவர்களின் உறவுகளில் ஒருமனம் இல்லை.
அனுதினமும் ஐவரும் அடிதடி நடத்துவர்.
அன்பான தந்தை ஐவரையும் அழைத்தார் .....
ஆளுக்கொரு கம்பை
ஆர்வத்தோடு கொடுத்து அதை ஒடிக்க சொன்னார்.
சிறு குச்சி அதை விரைவாக உடைத்து,
வெற்றியுடன் நின்றார் ஆண் மக்கள் ஐவர்.
இன்னுமொரு ஐந்து குச்சிதனை எடுத்து
அதை ஒன்றாக கட்டி
இதை உடைத்து பாருங்கள்
என தந்தை சொன்னார் .....
அதை உடைக்க முடியாமல்
ஐவருமே தவித்தனர் .
அப்பொழுது தந்தை அறிவுரையாய் சொன்னார்...
"தனிகுச்சியானால் எளிதாக உடையும்.
இணைந்து என்றும் இருந்தால்
அதுவே தான் பெலன்.
இதை உணர்ந்து கொண்டால்,
என்றும் முறிவு இல்லை"....
ஒருமித்த வாழ்வு
உயர்ந்து நிற்கும் என்றார்.
இதை கேட்ட பிள்ளைகளும்
மகிழ்ச்சியோடு ஏற்று கொண்டனர் .
இதயத்தில் ஒருமித்து
இனிமையாக வாழ்ந்தனர் .....