நிம்மதி மட்டுமே வேண்டும்
கை விரல் பிடித்து நடை பயின்ற போதும்
கால் தடம் பார்த்து வழி சென்ற போதும்
கண் இமை மூடி மனனம் செய்த போதும்
காசு பணம் முக்கியமாய் தெரியவில்லை
கவலை என்பதும் அறியவில்லை
பிறந்த நிலை பெரிதென்றபோது.
சொத்துக்கள் சுகங்கள் நிலை ஆனபோது
அத்தனையும் வந்தன
ஆரவாரங்கள் கூடின
நீ நான் உன் குடும்பம் , என் குடும்பம்
என பிரித்து பார்த்தபோது
பொல்லாங்கு சொல்லுவோரும்
புறம் கூறுவோரும்
பகடை உருடினர் காய் நகர்த்தினர்
பாசாங்கும் வேஷமும் நிதம்
காணும் காட்சிகளாயின
சொத்தும் வேண்டாம்
சுகமுமும் வேண்டாம்
நித்தம் நிம்மதி மட்டுமே வேண்டும்