தவிப்பு

சிறந்த கவிஞர்களை உருவாக்குவது
அழகான ரசனைகள் மட்டுமல்ல ,
ஆறாத ரணங்களும் தான்!

கரைந்து போன பொழுதுகளில் ,
கலந்து போன நினைவுகளில் ,
மறைந்து போன உன்னில் ,
மறந்து போன என்னை
இன்றளவும் தேடுகிறேன் !

எனக்காக எல்லாம் செய்தவர்கள் ,
என்னை சகித்தவர்கள் ,
எனக்காக வாழ்ந்தவர்கள் ,
என்னை எப்போதும்
ஒரே மாதிரியாய் நேசித்தவர்கள் ,
இப்படி ,
எனக்கான பட்டியலிட்டு,
என்னதான் தேடினாலும் ,
உன் பெயரைத் தவிர
வேறொன்றும் இல்லை! அம்மா !....

எழுதியவர் : வெற்றி மகள் (22-Nov-13, 1:17 pm)
Tanglish : thavippu
பார்வை : 124

மேலே