உன் விழிகள் கண்ணீரை கொட்டி

பசி மறந்து
வாழ்க்கை வெறுத்து
ஆவி அடங்கி
மூச்சு நின்று
ஒருவேளை நான்
நிரந்தரமாக தூங்கிவிட்டால் கூட...

மரணம் எல்லோருக்கும் உண்டு
நான் முன்னே என்றால்
நீ என் பின்னேதான்
ஆனாலும்
என் மரணத்தில்

நீ அழக்கூடாது....
முல்லை பூவாக
செவ்வரி ஓடிய
மான் போல மருளும்
உன் விழிகள் கண்ணீரை கொட்டி
கலங்கி விடக்கூடாது....

உயிரற்ற என் உடல் கூட
நீ அழுவதை தாங்காது கண்ணே.........

எழுதியவர் : சாந்தி (22-Nov-13, 10:41 pm)
பார்வை : 87

மேலே