ஷியாமளா அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து
அன்பிலே முளைத்து
இதயத்திலே
பூத்து குலுங்கும் கவியே !!!
நமக்குள் இடைவெளி அதிகம்
அன்பிற்கு தூரம் தடையல்ல
தினமும் உன் அன்பிலே
இளைப்பாறும் சிறு பிள்ளை நான்..!!!
கவியாழினியே
அன்பின் அவதாரமே
அக்கறையின் அச்சாரமே
பண்பின் சிகரமே
பாசத்தின் புனிதமே
உற்சாகத்தின் உயரமே
தன்னலம் இல்லா தாய்மையே
உன்னை எப்படி வாழ்த்துவது ..????
என் அன்னையே உனை
மலர் தூவி வாழ்த்த நினைக்கிறது
இயலவில்லை ..!!!
மனதிலே பூத்த
இவ்வார்த்தை மலர்களை
உன் பொற்பாதங்களில் சமர்ப்பித்து
வாழ்த்துகிறேன் ..!!!
நலமும், வளமும் பெருகி
வெற்றியும், புகழும் பெற்று
வசந்தம் உங்கள் வாழ்விலே
நிலைத்து இருக்கட்டும்...!!!
தேனும், பாலுமாய் உங்கள் வரிகள்
தினமும் எங்களை மகிழ்விக்கட்டும
உங்கள் அன்பு எனக்கு
என்றும் நிலைத்து இருக்கட்டும் ..!!!
புன்சிரிப்பு மாறாமல்
புது வேகம் குறையாமல்
புதுப்பாதை நிறைவோடு
பல்லாண்டு வாழ்ந்திருக்க
வாழ்த்த வயதில்லை
என்ற போதும் வணங்கி வாழ்த்துகிறேன்..!!!
பிறந்தநாள் காணும் அன்பு அம்மா ஷியாமளா ராஜசேகர் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!!!