காதலா கவர்ச்சியா

ஊர் பேர் தெரியாமல்
உன் பேரும் அறியாமல்
உன் குணமும் புரியாமல்
உன் மேல் காதல் வந்தது எப்படி
அது காதலா கவர்ச்சியா ?

காதல் என்றால் , கண்ணே
கனிவாய் சிரித்துவிடு
உனக்கும் எனக்கும் தெரிந்தது
ஊர் அறியவேண்டும்
உண்மை தெரிய வேண்டும்

உன் நினைப்பில் நான் நினைப்பதெல்லாம் .......
உன் கை பிடித்து நான் தலை கணம் கொள்ளவேண்டும்
உன் அலைபாயும் கூந்தலிலே
என் கை உன் தலை கோத வேண்டும்
கண்ணாடி கன்னத்தில் முகம்
பதித்துப் பார்க்க வேண்டும்
இறுக அணைக்கும் கைக்குள்ளே
நாளெல்லாம் கழிய வேண்டும்

உன் இதழோரம் கசியும் கள்ளமில்லா சிரிப்பில்
வழியும் இனிப்பை முழுதும் சுவைக்க வேண்டும்
கண் மணியே என் கண் மணியில் நீயே பதிந்து
பார்க்கும் இடமெல்லாம் நீயாக வேண்டும்
நான் நினைக்கும் நினைப்பெல்லாம் நனவாகுமா

நினைப்பதை தந்துவிடு
நினைவில் வாடுகிறேன்
வாட்டத்தை மாற்றிவிடு .

எழுதியவர் : arsm1952 (30-Nov-13, 10:50 am)
சேர்த்தது : arsm1952
பார்வை : 82

மேலே