அதிர்ஷடசாலி தாய்பாசம்
(வெளிநாடு வாழ் சகோதர சகோதரிகளுக்கு சமர்ப்பணம்)
யார் அதிர்ஷடசாலி நானா? லட்சுமியா?
"அம்மா" என்றழைக்க
சில பல எண்களை தட்டி
விழிகளில் நீர் துளிகளுடன் காத்திருக்க
அதே நிலைமையில் - மறுமுனையில்
வார்த்தைகள் தடுமாற
உடம்பிற்கு சுகமா? நேரா நேராதிற்க்கு சாபிடுகிறாயா?
என்ற வார்த்தைகளுக்கு சந்தோஷபடும் நானா?
"அம்மா............" என்றழைக்க
ஏந்திய புல்கட்டுடன் தொழுவம் சென்று
புல்கட்டை கீழே போடுவதற்குள்
நாக்கை சுழட்டிய வாக்கில்
அம்மாவின் கைகளிலேயே
உணவருந்தும் லட்சுமியா?
யார் அதிர்ஷடசாலி...............