இலை
இன்னும்
கொஞ்ச நாளில்
நானே உதிர்ந்து விடுவேன்
இந்த மன்னோனோடு
மண்ணாக
மக்கி விடுவேன்......?
உன்னைப்போல்தான்
நானும்
தளிர்விட்டு
பசுமையாக.......
இன்று
என்னுள்
ஏகப்பட்ட மாற்றங்கள்
என்று நான் வீழ்வோனோ...?
என்னுளிருந்த
பசுமைகளை
பறித்துக்கொண்டது காலம்
இன்னும் நான்
இருக்கப்போவதோ
கொஞ்ச காலம்
இன்னும்
கொஞ்ச நாளில்
நானே உதிர்ந்து விடுவேன்
இந்த மன்னோனோடு
மண்ணாக
மக்கி விடுவேன்......?
அதற்குள்
நீயாக
பிடுங்கிவிடாதே என்னை...?
உன் அடாவடி செயல்களால்
அழித்துவிடாதே என்னை...!
முதியோர் இல்லம்
எனக்கு வேண்டாம்
மகனே!
இன்னும்
கொஞ்ச நாளில்
நானே உதிர்ந்து விடுவேன்