பாரதம்

கீதை சொல்லும் பாதை
இருக்கட்டும் நல்ல சிறப்பாக !
பைபிள் சொல்லும் கால்பாடோ
தொலையாது காப்போம் பண்பாக !
அருள்மறை சொல்லும் பொதுமுறையோ
பேணிக் கொள்வோம் பெருமையாக !

யார்மதமும் எரிடமும் மோதவேண்டாம்
எல்லோர்மனமும் அன்பால் சேரவேண்டும்
பாரதம் என்பது கூட்டுப் பொருள்
பிரிக்க நினைத்தால் நாற்றப் பொருள் !

தேசம் குடித்தது பொதுவுடமை ரத்தம்
நேசம் இழந்து வெட்டிகொல்வது என்ன சித்தம் ஒன்றுசேர்ந்தால் பாரதம் பார்க்கும் ரதமே
ஒற்றுமை இழந்தால் பாரதம் வேதனை ராகமே

ஒன்றென உணர்வோம் அன்பில் எழுவோம்
நன்றென நாடு நலமாய் வாழ நம்
பாரதம் பார்க்கும் ரதமே என்றும்
பண்பில் பூக்கும் பூக்களின் ரகமே !


சரோ

எழுதியவர் : சரோ (12-Dec-13, 9:31 pm)
Tanglish : paaratham
பார்வை : 228

மேலே