முன் கோபம்

சொந்தக் கவிதை - 5

நற்குணங்கள் பல இருந்தும்
முன்கோபம் எனையா என்றாள்
அவனோ அழகான கன்னத்தில்
அது திருஷ்டிப் பொட்டென்றான்.

பெண்டிற்கு அழகு பொட்டு
உமக்கில்லை என்றாள் அவள்.
சிரித்துச்சொன்ன அவள்வார்த்தை
சட்டென சுட்டது அவன்நெஞ்சை.

தவறை மறைத்தது முன்கோபம்
குறைத்திட அவனும் துணிந்திட்டான்
பெரிதான தெரிந்த அவ்வடுவும்
கடுகாய் சிறுத்துப் போனதுவே

தவறும் ஆணும் திருந்திடவே
உரைத்திடுவீர் அன்புடன் அவன்தவறை
மணத்திடும் உங்கள் இல் வாழ்க்கை.
நீங்கள் நினைத்தால் நடந்திடுமே

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (15-Dec-13, 5:38 pm)
பார்வை : 130

மேலே