அம்மா
குட்டி தூக்கம்
போட
கூடாரம் தந்தாய்...!
சுவை என்றாய்
சுமை என்னை...!
கருப்பைக்குள்
கால்பந்து
நான் விளையாட
கலவரப்பட்டாய்...!
கண்ணாடி
வளையிட்டு
கஜல் இசைத்தாய்...!
உண்டதெல்லாம்
என் உயிருக்கு
அளித்தாய்...!
தாயே
உடல் பெருத்தாய்
உருவம்
உருக்குலைந்தாய்...!
உன்னை
பணயம் வைத்து
என்
பயணம் முடித்தாய்...!
கண்
விழித்தவுடன்
நான் கண்ட
சூரியனே...!
மனம்
குளிர்விக்கும்
சந்திரனே...!
நீள வேண்டும்
உன் வாழ்நாளே...!