காதல்

கவிதை ஜனிக்கும் நேரம்
வாழ்வின் நிலாக்காலம்
மனங்கள் உலா போகும்
நிழல் தானாய் தொலையும் நேரம்

எண்ணிலடங்கா வார்த்தை பேசும்
முடிவாய் மௌனம் நீளும்
கனமாய் மனசு தோன்றும்
காதல் கார்காலம்

அவள் கால்தடம் படுகின்ற இடமெல்லாம்
பூக்கள் பூப்பதுபோல் தோன்றும்
அவள் பார்வை படும் நிமிடம்
சொர்க்கமாய் மனம் நினைக்கும் நாளும்

முடிவிலா வாழ்க்கை சக்கரம்
முடிவை தேடும் அவசரம்
தேடல் உண்டு நாளும்
காதல் போல் வலிப்பதில்லை
எந்த சாவும் ................

எழுதியவர் : ருத்ரன் (17-Dec-13, 1:45 pm)
Tanglish : kaadhal
பார்வை : 80

மேலே